தமிழ்ப்ரியன் கல்வி சார்பாக நடத்தப்படும் தேர்வுகள் குறித்த முழு விவரம்
பாடத் தலைப்புகள் : எங்கள் தமிழ், ஒன்றல்ல இரண்டல்ல, பேச்சுமொழியும் எழுத்துமொழியும், சொலவடைகள், குற்றியலுகரம், குற்றியலிகரம்
PDF டவுன்லோட் செய்ய : இந்த குறிப்புகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்துகொள்ள விரும்புபவர்கள், கீழே உள்ள தேர்வை ATTEND செய்யவும். தேர்வை முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண்ணுடன் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க்கும் காட்டப்படும். அதனைக் கிளிக் செய்து PDF டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இந்த இயலில் மொத்தம் 87 குறிப்புகளும் அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட 60 கேள்விகளும் உள்ளன.
தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 60
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் அனைத்தையும் PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcodeResults
#1. உபகாரி என்னும் சொல்லின் பொருள்
#2. "அருள்நெறி - அதுவே" இந்தச் சொற்கள் எதற்கான எடுத்துக்காட்டு
#3. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று துவங்கும் பாடலின் ஆசிரியர்
#4. வல்லின மெய் எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்
#5. "மனிதரும் - இசைந்திடும்" இந்தச் சொற்கள் எதற்கான எடுத்துக்காட்டு
தேர்வு எழுதி முடிக்கும் பொழுது உங்களுடைய மதிப்பெண் மற்றும் PDF டவுன்லோட் செய்வதற்கான லிங்க் காட்டப்படும்
எங்கள் இணையதளத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒரு வரி குறிப்புகள் அனைத்தும் பாடவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்வும் (TEST) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்புகள் அனைத்தையும் படித்துவிட்டு அந்த தேர்வை எழுதிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவரி வினாக்கள் அனைத்தும் பாடப்புத்தகத்தை வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்டதாகும்.
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து வினாக்களையும் நீங்கள் முறையாக பயிற்சி செய்தாலே தமிழகத்தில் நடைபெறும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.
இது போன்று அனைத்து பாடங்களுக்குமான, வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட வினாக்களை பெற கீழே உள்ள டெலிகிராம்/ வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.
Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://chat.whatsapp.com/CAJ20fhIAwEHEmeagezQBS
youtube channel : https://www.youtube.com/c/ThamizhpriyanKalvi
Website: http://tpnkalvi.in/
வரி வரியாகப் படித்து எடுக்கப்பட்ட ஒரு வரி குறிப்புகள்
- "அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழரின் குரலாகும்" என்று துவங்கும் பாடலின் ஆசிரியர் -
நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார் - பொழிகிற என்னும் சொல்லின் பொருள் - தருகின்ற
- ஊக்கிவிடும் என்ற சொல்லின் பொருள் - ஊக்கப்படுத்தும்
- விரதம் என்ற சொல்லின் பொருள் - நோன்பு
- குறி என்கிற சொல்லின் பொருள் - குறிக்கோள்
- தமிழ் அன்பையும் அறத்தையும் தூண்டும் என்று கூறுபவர் - நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
- காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
- தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் - நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
- என்கதை என்ற நூலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
- மலைக்கள்ளன் என்ற நூலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
- சங்கொலி என்ற நூலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
- "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்று துவங்கும் பாடலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்
- "குரலாகும்" எனும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது - குரல்+ஆகும்
- வான்+ஒலி என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் - வானொலி
- "அருள்நெறி - பொருள்பெற" இந்தச் சொற்கள் எதற்கான எடுத்துக்காட்டு - எதுகை
- "அருள்நெறி - அதுவே" இந்தச் சொற்கள் எதற்கான எடுத்துக்காட்டு - மோனை
- "மனிதரும் - இசைந்திடும்" இந்தச் சொற்கள் எதற்கான எடுத்துக்காட்டு - இயைபு
- "ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்" என்று துவங்கும் பாடலின் ஆசிரியர் - உடுமலை நாராயணகவி
- ஒப்புமை எனும் சொல்லின் பொருள் - இணை
- அற்புதம் எனும் சொல்லின் பொருள் - விந்தை
- முகில் என்னும் சொல்லின் பொருள் - மேகம்
- உபகாரி என்னும் சொல்லின் பொருள் - வள்ளல்
- பகைவரை வென்றதை பாடுவது பரணி இலக்கியம்
- முல்லைக்குத் தேர் தந்து புகழ் பெற்றவர் - பாரி
- புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தவர் - குமணன்
- பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயணகவி
- வானில் முகில் கூட்டம் திரண்டால் மழை பொழியும்
- "இரண்டல்ல" என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது - இரண்டு+அல்ல
- "தந்துதவும்" என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது - தந்து+உதவும்
- வாயினால் பேசப்பட்ட பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும்
- பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை
- கண்ணால் கண்டு உணருமாறு வரி வடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்து மொழியாகும்
- எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் இரண்டாம் நிலை
- மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்து மொழியே காரணமாகின்றது
- ஒலி வடிவில் அமையும் பேச்சு மொழியானது உடனடி பயன்பாட்டுக்கு உரியது
- வரி வடிவில் அமையும் எழுத்து மொழியானது நீண்டகால பயன்பாட்டிற்கு உரியது
- பேசப்படும் சொற்கள் மட்டுமன்றி பேசுபவரின் உடல் மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சு மொழியின் சிறப்பு கூறுகளாகும்
- "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" எனும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - நன்னூல்
- " பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி. எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்து கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்" என்று கூறியவர் - மு வரதராசனார்
- இடத்திற்கு இடம் மற்றும் மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் பேச்சு மொழி வட்டார மொழி என்று அழைக்கப்படுகிறது
- ஒரே மொழியைப் பேசும், வெவ்வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு இடையேயான தொடர்பு குறையும் பொழுது மொழியில் மாற்றங்கள் அதிகமாகி புதிய மொழிகள் உருவாகும். அந்த புதிய மொழிகள்கிளைமொழிகள் என்று அழைக்கப்படுகின்றன
- உலக வழக்கு என்று அழைக்கப்படுவது பேச்சுமொழி ஆகும்
- இலக்கிய வழக்கு என்று அழைக்கப்படுவது எழுத்துமொழி ஆகும்
- உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு போன்றவற்றிற்கு எழுத்து மொழியில் இடமில்லை
- தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே வேறுபாடு உள்ள காரணத்தால் தமிழை இரட்டை வழக்கு மொழி என்பது
- "எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்" என்று ஆசைப்பட்டவர் யார் - பாவேந்தர் பாரதிதாசன்
- மொழியின் முதல் நிலை பேசுதல், கேட்டல் ஆகியனவாகும்
- ஒலியின் வரி வடிவம்எழுத்து ஆகும்
- தமிழின் கிளை மொழிகளில் ஒன்று - தெலுங்கு
- பேச்சுமொழியை உலக வழக்கு என்றும் கூறுவர்
- தமிழ் எழுத்துக்களை முதலெழுத்து சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர்
- உயிர் 12, மெய் 18 ஆகிய 30 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும்
- சார்பெழுத்து 10 வகைப்படும்
- சார்பெழுத்தின் வகைகள் உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் மற்றும் ஆய்தக்குறுக்கம் என்பனவாகும்.
- கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும் போது ஒரு மாத்திரைக்கு பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்
- தனிக் குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.
- வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்.
- ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும் உகரம் முற்றியலுகரம் என்று அழைக்கப்படும்
எடுத்துக்காட்டு: பசு, அது, மாவு, ஏழு - தமிழ் எழுத்துக்களை குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய அசைச்சொற்களைப் பயன்படுத்துகிறோம்
- குற்றியலுகரம் 6 வகைப்படும்
- தனிநெடிலை தொடர்ந்துவரும் குற்றியலுகரம் - நெடில் தொடர் குற்றியலுகரம்
- ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
- தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- வல்லின மெய் எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் - வன்தொடர்க் குற்றியலுகரம்
- மெல்லின மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் - மென் தொடர்க் குற்றியலுகரம்
- இடையின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் - இடைத்தொடர்க் குற்றியலுகரம்
- பாகு என்பது - நெடில் தொடர் குற்றியலுகரம்
- வரலாறு என்பது - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- பாட்டு என்பது - வன்தொடர்க் குற்றியலுகரம்
- அன்பு என்பது - மென் தொடர்க் குற்றியலுகரம்
- மார்பு என்பது - இடைத்தொடர்க் குற்றியலுகரம்
- வ் என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை
- எந்த எழுத்துக் இறுதியாக அமையுமாறு இடைத்தொடர் குற்றியலுகர சொற்கள் வருவது இல்லை - டு
- தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்
- குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும் - 2
- குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும். அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும். இவ்வாறு மாத்திரை அளவு குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் என்றழைக்கப்படும்
எடுத்துக்காட்டு : கொக்கு+யாது = கொக்கியாது - மியா என்னும் அசைச்சொல் சொற்களில் இடம்பெறும்போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் ஆகும் எடுத்துக்காட்டு : கேள்+மியா = கேண்மியா
- ஆறறிவு உடைய மனிதர்களை உயர்திணை என்பர்
- பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரில்லாத பொருட்களை அஃறிணை என்பர்
- Media என்ற சொல்லின் பொருள் - ஊடகம்
- Linguistics என்ற சொல்லின் பொருள் - மொழியியல்
- Magazine என்ற சொல்லின் பொருள் - பருவ இதழ்
- Journalism என்ற சொல்லின் பொருள் - இதழியல்
- பொம்மலாட்டம் என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Puppetry
- எழுத்திலக்கணம் என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Orthography
- ஒலியியல் என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Phonology
- உரையாடல் என்ற சொல்லின் ஆங்கில மொழியாக்கம் - Dialogue
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான சில முக்கியமான இலவச தேர்வுகளின் லிங்க்குகள்
1. 20 Questions test series – Test 12- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-12/
2. 20 Questions test series – Test 11 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-11/
3. 20 Questions test series – Test 10 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-10/
4. 20 Questions test series – Test 9- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-9/
5. 20 Questions test series – Test 8- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-8/
6. 20 Questions test series – Test 7- http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-7/
7. 20 Questions test series – Test 6 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-6/
8. 20 Questions test series – Test 5 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-5/
9. 20 Questions test series – Test 4 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-4/
10. 20 Questions test series – Test 3 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-3/
11. 20 Questions test series – Test 2 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-2/
12. 20 Questions test series – Test 1 - http://tpnkalvi.in/online-test/free-tests/20-questions-test-series-test-1/
Nice
I will join the Text Exam
Excellent
Nice
Good